சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 773 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 124 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 71,467 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை உரிய அனுமதியின்றி மேல் மாகாண எல்லையை கடக்க முயன்ற 193 வாகனங்களில் பயணித்த 306 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.