நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம் ஹலாவத்தை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சச்சிந்த தில்ஷான் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
வட்டவளை லொனக் பாற்பண்ணைக்கு சொந்தமான அணைக்கட்டு ஒன்றில் நேற்று மாலை 5.00 மணியளவில் ஐந்து இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர்.
நீராடிக் கொண்டிருந்த போது அவர்ளில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பட்டுக்கு இணங்க இராணும் மற்றும் பொது மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடல் பணிகளை முன்னெடுத்தனர்.
இதன் விளைவாக காணாமல்போன இளைஞர்கள் இருவரும் இன்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.