Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உத்தரவை மீறிய மேலும் 509 பேர் கைது

உத்தரவை மீறிய மேலும் 509 பேர் கைது

1 minutes read

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 509 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலக் கட்டத்தில் 25 வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 76,145 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் 730 வாகனங்களில் பயணித்த 2,179 நபர்களை பொலிஸார் ஆய்வு செய்தனர்.

இதன்போது உரிய அனுமதியின்றி எல்லைகளை கடக்க முயன்ற 190 வாகனங்களில் பயணித்த 357 நபர்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More