Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 376 பேர் கைது

1 minutes read

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 376 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலக் கட்டத்தில் 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 78,253 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய மேல் மாகாணத்திற்குள் உள் நுழைந்த 1,310 நபர்களும், வெளியேற முயன்ற 1,135 நபர்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 109 வாகனங்களில் பயணித்த 225 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More