பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த பேராளுமை குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் என புகழஞ்சலி வெளியிட்டுள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன்.
நல்லூர் எஜமானர் குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் முருகன் திருவடி நீழலைச் சேர்ந்த செய்தி நெஞ்சிலே எழுதும் கனம் தாங்கமுடியாதது. நல்லூரின் 10 வது அறங்காவலராக நல்லூரின் இன்றைய ஆன்மீக அழகின் மூலவராக அவராற்றியபணிகளின் பெறுமதி எல்லையிலாதது.
எளிமையான அவர் வாழ்வின் பக்குவம் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை; அவரோடு பழகக் கிடைத்த பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை.பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக்கட்டிக்காத்த பேராளுமையாக என்றென்றும் அவர் மேலான நினைவுகள் காக்கப்படும்.