Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்கு அழைப்பு

1 minutes read

தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சுஜீகரன் நிசாந்தன் விசாரணைக்காக எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவின் ( சி.ரி.ஜ.டி) காரியாலயத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக வெர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழ் கட்சியின் தேசிய அமைப்பாளரின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை  சென்ற பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணை பிரிவினர் தேசிய அமைப்பாளர் அங்கு இல்லாத நிலையில் அவரின் பெற்றோருடன் அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு -5 உள்ள கிருளைப்பனை பேஸ்லைன் வீதியிலுள்ள குறித்த காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளராகவும் செயற்பட்டுவரும் சு.நிசாந்தன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More