ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டத்தின் மூலமாக மாணவர்கள் அந்தந்த பாடசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமானைகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் ஒரு வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தவுமத் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.