சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக, இலங்கையில் அவசர கொவிட்-19 உதவிக்காக மேலதிகமாக 2.5 மில்லியன் டெலர்களை வழங்கவுள்ளது.
இந்த தகவலை கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் உறுதிபடுத்தியுள்ளது.
இந்த உதவியானது பாதுகாப்பான மற்றும் பயனுறுதியுள்ள கொவிட்-19 தடுப்பூசியேற்றல்களுக்கான சமமான அணுகலைத் துரிதப்படுத்தும் மற்றும் கொவிட்-19 இனை எதிர்கொள்வதற்கான சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துமென, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.