Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர் வாரம் – வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்!

மாவீரர் வாரம் – வவுனியாவில் விசேட பாதுகாப்பு கடமையில் பொலிஸார்!

1 minutes read

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது.

இந்நிலையில் வவுனியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த வருடங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்ட வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி, வவுனியா குளத்தடி மற்றும் நகரின் முக்கிய சந்திகளில் பொலிஸார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் விண்ணப்பத்திற்கமைய மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு, வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More