Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு!

தேசிய கராத்தே அணிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முறையாக பெண் வீராங்கனை ஒருவர் தெரிவு!

1 minutes read

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியிலிருந்து தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரர்,வீராங்கனையை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் வீரர் மற்றும் வீராங்கனைகளே இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் பிரதான போதனாசிரியர் பொறியியலாளர் சிகான் முருகேந்திரன் வழிகாட்டலில் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வாவின் பயிற்றுவிப்பு ஊடாக ஆர்.துஸ்யந்தன் என்னும் வீரரும் வி.விதுஜா என்னும் வீராங்கனையும் இவ்வாறு தேசிய கராத்தே அணிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து முதன்முறையாக பெண்னொருவர் தேசிய கராத்தே அணிக்கு மட்டக்களப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் 21வயதுக்குட்பட்ட தேசிய அணியில் முதன்முறையாக மட்டக்களப்பிலிருந்து ஆண் ஒருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் விளையாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு ஜப்பான் கராத்தே மரியோகிக்காய் சங்கத்தின் போதனாசிரியர் எச்.ஆர்.சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் போது தேசிய அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட வீரரும் வீராங்கனையும் இதன்போது மாநகரசபை முதல்வர்,பிரதி முதல்வரினால் கௌரவிக்கப்பட்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More