Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் காஸ் சிலிண்ர் வெடிப்பு சம்பவம் அரசாங்கத்தின் சதித்திட்டம் என சந்தேககம்!

இலங்கையில் காஸ் சிலிண்ர் வெடிப்பு சம்பவம் அரசாங்கத்தின் சதித்திட்டம் என சந்தேககம்!

1 minutes read

நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மின்சக்தி அமைச்சு மற்றும் வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறுகிய தினங்களில் இந்தளவு காஸ் சிலிண்டர்கள் வெடித்தது தொடர்பில் நாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை என்பதுடன் இந்த பிரச்சினையில் இருந்து அரசாங்கம் விலகிச்செல்லாமல் முறையான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ரஞ்ஜித் மத்தும பண்டார வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது காஸ்விலை 2 ஆயிரத்து 313 ரூபாயாக இருந்தது. அதனை நாங்கள் ஆயிரத்தி 342 ரூபாயிக்கு குறைத்தோம். ஆனால் அரசாங்கம் காஸ்விலையை 2ஆயிரத்தி 675 ரூபாய் வரை அதிகரித்திருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், காஸ் சிலிண்டர் வெடிப்பதிலும் சதித்திட்டம் இருக்கவேண்டும் என்றே தோன்றுகின்றது. இதற்கு காரணம் ஆட்சியாளரின் புதல்வர் ஒருவரின் பெயரில் இந்தியாவில் இருந்து காஸ் சிலிண்டர் கொண்டுவர திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது எனவும் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More