Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமேல் மாகாண ஆளுநராக சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி நியமனம்?

வடமேல் மாகாண ஆளுநராக சர்ச்சைக்குரிய கடற்படையின் முன்னாள் தளபதி நியமனம்?

1 minutes read

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More