வடக்கில் போதைப் பொருள் கடத்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளே ஈடுபவடுதாகவும் இராணுமவல்ல என்றும் அருண் சித்தார்த் என்பவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
ஒரு சிலரோடு எமது அமைப்பு கலந்துரையாடிய போது முன்னாள் போராளிகள் இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக போராட்டத்தில் இணைந்ததன் காரணமாக தற்போது விடுதலையாகி தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்கு வேறு வழி இல்லாது இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள்.
குறிப்பாக இங்கிருந்து படகுகளில் இந்தியாவிற்கு சென்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என்ற ரீதியில் மிகவும் துணிந்தவர்கள் என்பதனால் அவர்களுக்கு இலகுவாக இந்தியா சென்று போதைப்பொருட்களை கடத்தக்கூடிய நிலையில் இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வரும் அருண் சித்தார்த் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.