மாவீரர் தின நிகழ்வுகளுக்கு நெருக்கடிகள் கொடுக்காது அவற்றை நடத்திச் செல்ல இடமளித்தமை நல்லிணக்கத்துக்காக இலங்கை ஜனாதிபதி வழங்கிய சமிக்ஞை எனக் குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அந்த நிலைப்பாட்டைத் தாங்கள் வரவேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய சமயமே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சில இடங்களில் தடங்கல்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், பெரியளவில் நெருக்கடி கொடுக்கப்படவில்லை என்றார் அவர். இதற்காக அவர் ஜனாதிபதிக்கு அந்த உரையில் நன்றி கூறினார்.
ஊடகவியலாளர்களுக்கு உரிய உதவித் திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் விவரித்தார்.