கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி, 155ஆம் கட்டைப் பகுதியில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி – இரணைமடு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த 22 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.