Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பூஸா சிறையில் மேலும் 4 கைத்தொலைபேசிகள் சிக்கின!

பூஸா சிறையில் மேலும் 4 கைத்தொலைபேசிகள் சிக்கின!

0 minutes read

காலி – பூஸா சிறைச்சாலையில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெரும் குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவில் 4 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த 6ஆம் திகதி மேலும் 5 கைத்தொலைபேசிகள், சிம்கார்டுகள், சார்ஜர்கள் என்பன பூஸா சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

சிறைச்சாலை வளாகத்துக்குள் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சிறைச்சாலை திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More