இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய ஆயத்தின் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கமும் இரண்டு சட்டத்தரணிகளும் அவருக்கு எதிராக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.