0
“ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை விரட்டியடித்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்கள்.”
– இவ்வாறு ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான தனிஷ் அலி தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பின் அதிகாரத்தைத் தமது அணி நிச்சயம் கைப்பற்றும் என்றும் அவர் சூளுரைத்தார்.