2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் நடத்தினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைப் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன்போது அவர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாகவும் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.