Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உரும்பிராய் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!

உரும்பிராய் விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!

1 minutes read

சைக்கிளில் பயணித்தவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வயோதிபர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்., உரும்பிராய் வடக்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லப்பா செல்வரத்தினம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் இருந்து உரும்பிராய் காளிகோயிலுக்குச் சைக்கிளில் சென்றுள்ளார்.

பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இடதுபுறமாகச் சென்ற அவர் கோயில் இருக்கும் வலது பக்கமாகச் சைக்கிளைச் செலுத்தி நடுக் கோட்டையும் தாண்டி ஒரு மீற்றர் தூரம் சென்ற நிலையில் பின் பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதித் தள்ளியது.

விபத்தில் மயக்கமடைந்த முதியவரை, விபத்தை ஏற்படுத்திய நபரே போதனா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இந்தநிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

மரணம் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More