Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல்கள் எப்போது நடக்கும்? – அரசு நழுவல் பதில்

தேர்தல்கள் எப்போது நடக்கும்? – அரசு நழுவல் பதில்

1 minutes read

“எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்க வேண்டும்.”

– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

தேர்தல்கள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா?

பதில்:- அப்படியொரு தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. அரசு முன்னுரிமை கொடுப்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குத்தான். இதை நாம் வேகமாகச் செய்து முடிப்போம்

கேள்வி:- நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறியுள்ளாரே…?

பதில்:- அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசைப் பொறுத்தவரை அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.

கேள்வி:- அப்படியாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்?

பதில்:- அதைத் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்கவேண்டும் – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More