September 28, 2023 11:17 pm

கிளிநொச்சியில் காணாமல்போன பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கிளிநொச்சியில் கசிப்புக் கும்பலைத் துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த சதுரங்க (வயது 28) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸ் குழு நேற்று முற்றுகையிட்டது. அதன்போது அங்கிருந்தவர்கள் காட்டு வழியே தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்ற வேளை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரைத் தேடும் பணியில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்த வேளை, புதுஐயன்குளம் பகுதியில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னரே  பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்