December 4, 2023 5:39 am

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைதுசெய்ய முயன்ற பொலிஸார் மீது தாக்குதல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

யாழ்ப்பாணம், சுழிபுரம் – பறாளாய் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (17)  வட்டுக்கோட்டை பொலிஸார் சிலர் குறித்த நபரை கைது செய்வதற்காக அந்த பகுதிக்கு சென்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை  நிலவியுள்ளது .

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்