காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காந்தியின் உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்திக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.