Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவு படும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதம்!

1 minutes read

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களின் தலையீடுகள் மாறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் அண்மையில் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தனது சொந்தக் கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைந்துகொள்ளுமாறு ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சில சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மைய மாதங்களில் அரசாங்கத்தின் சில கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த பிளவு மிகவும் அதிகரித்துள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான மோதல்களைத் தவிர்க்குமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் அண்மைய நாட்களில் ஆலோசனை வழங்கியதுடன், அரசாங்கத்தில் இருந்து மரியாதையுடன் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையானது பொதுஜன பெரமுனவுடன் பிளவுபடுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அந்தக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதும் சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடும் என்றாலும், சில ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் அமருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொதுஜன பெரமுன சில சிறுபான்மைக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், பிரதி அமைச்சுக்கள் மற்றும் அரச அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து ஆதரவளித்தால் அவர்களுக்கு மாற்றாக இது நடைபெறும்.

புதிய அமைச்சரவை மாற்றத்தில், புதிய முகங்களும் முக்கிய இலாகாக்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சில மாநில அமைச்சகங்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More