செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நேபாள தூதுவருடன் கலந்துரையாடல் | ரணில் விக்ரமசிங்க

நேபாள தூதுவருடன் கலந்துரையாடல் | ரணில் விக்ரமசிங்க

0 minutes read

இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையில் இருதரப்பு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

சுற்றுலா அபிவிருத்தி மற்றும் பல்கலைக்கழங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நேபாள தூதுவர் பாஷூ தேவி மிஷ்ரா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

சுற்றுலாத்துறை, பல்கலைக்கழக கல்வி மற்றும் இரண்டு நாடுகளினதும் இளைஞர்களுக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள்  வௌிவிவகார அமைச்சு மற்றும் நேபாள அரசாங்கத்திற்கு இடையில் இடம்பெறவுள்ளதாக  ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் அந்நாட்டின் முதலீட்டாளர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளனர்.

நாட்டின் மீள் புதுப்பிக்கத்தக்க துறையின் முதலீடு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More