இவ்வாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் உலகிலேயே மிகவும் அமைதியான நாடாக முதல் இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.
பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய உலகளாவிய அமைதி குறியீட்டின்படி, இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து 2008ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளது.
ஐஸ்லாந்தைத் தொடர்ந்து முறையே அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.
இந்த நாடுகள் சமூக பாதுகாப்பு, வரையறுக்கப்பட்ட இராணுவமயமாக்கல் மற்றும் தொடர்ச்சியான மோதல்கள் இல்லாதது ஆகியவற்றில் தொடர்ந்து அதிக மதிப்பெண் பெறுகின்றன.
பொதுவாக வலுவான நிர்வாகம், சமூக நம்பிக்கை மற்றும் நிறுவன ரீதியான மீள்தன்மை என்பவற்றை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில், மூன்றாம் தரப்பு தரவுத்தொகுப்புகளில் உலகளாவிய அமைதி குறியீட்டு மதிப்பெண் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கை 163 நாடுகளில் 97வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட நாடு இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
தெற்காசியாவில் பூட்டான் மற்றும் நேபாளத்திற்குப் பிறகு மூன்றாவது அமைதியான நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.