உங்கள் சுவையை தூண்டும் பாகற்காய் சம்பல் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாகற்காய் சம்பல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!
சமைக்க தேவையானவை
உணவு செய்முறை : பாகற்காய் சம்பல்
-
Step 1.
முதலில் வெங்காயத்தை மெல்லியதாக, நீளமாக அரிந்து உதிர்த்து வைக்கவேண்டும். பின் தக்காளி, பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கி வைக்கவும்.
-
Step 2.
பாகற்காயைக் கழுவி நீளமாக இரண்டாக வெட்டி, உட்பகுதியை கரண்டியால் சுரண்டி நீக்கி மெல்லிதாக நறுக்கவும். இப்பொழுது நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும்.
-
Step 3.
வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, காயை சிறிது சிறிதாகப் போட்டு காய் நீர் விட்டு இருக்கும் அதனால் அழுத்திப் பிழியாமல் வடித்து எடுத்துப் போடவும் .இப்பொழுது பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பேப்பர் டவலில் பரவலாகப் போட்டு நன்கு எண்ணெயை வடியவிடவும்.
-
Step 4.
பிறகு அனைத்தையும் தயாராக வைத்திருந்து பரிமாறுமுன் கலந்து பரிமாறவும் கலக்கும் போது அழுத்திப் பிசைய வேண்டாம். சம்பலில் பாகற்காய்த் துண்டுகள் இளகாமல் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.
நன்றி : அறுசுவை சமையல்