செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு மென்செஸ்ட்டர் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு; கொல்லப்பட்ட தாக்குதலாளியின் பெயர் வெளியானது!

மென்செஸ்ட்டர் சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு; கொல்லப்பட்ட தாக்குதலாளியின் பெயர் வெளியானது!

1 minutes read

மென்செஸ்ட்டரில் (Manchester) உள்ள ஹீட்டன் பார்க் ஹீப்ரு சபை யூத ஆலயத்தின் (Heaton Park Hebrew Congregation Synagogue) மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், மூவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மென்செஸ்ட்டர் பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்குக் காரணமானவர், 35 வயதான ஜிஹாத் அல்-ஷமி (Jihad Al-Shamie) என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். தாக்குதலாளி, சிரிய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை ஆவார்.

இந்தத் தாக்குதல் சம்பவம், யூத நாட்காட்டியில் மிக புனிதமான நாளாகக் கருதப்படும் யோம் கிப்பூர் (Yom Kippur) அன்று நிகழ்ந்துள்ளது. நேற்றுக் காலை 09:30 மணிக்குப் பிறகு யூத ஆலயத்திற்கு வெளியே பொதுமக்கள் மீது ஒரு கார் ஓட்டப்பட்டு, பின்னர் அந்த நபர் மக்களை கத்தியால் குத்தத் தொடங்கினார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, முதல் 999 அழைப்பு வந்த ஏழே நிமிடங்களில் தாக்குதலாளியைச் சுட்டுக் கொன்றனர்.

தாக்குதலாளி ஒரு சாதனத்தை அணிந்திருந்தார். ஆனால், அது “செயலற்றது” (not viable) என்று அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

தாக்குதலின் போது யூத ஆலயத்தில் “பெரிய எண்ணிக்கையிலான மக்கள்” வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தை ஒரு பயங்கரவாதச் சம்பவமாக பொலிஸ் அறிவித்துள்ளது.

கைதுகள் மற்றும் விசாரணை தாக்குதலாளியின் இலக்கு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயங்கரவாதச் செயல்களைத் தயாரித்தல் மற்றும் தூண்டுதல் ஆகியவற்றின் சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களும், 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அடங்குவர்.

தாக்குதலாளியான ஜிஹாத் அல்-ஷமி குறித்து முன்னதாக பயங்கரவாத எதிர்ப்புத் திட்டமான ‘பிரெவென்ட்’ (Prevent scheme) மூலம் எந்தப் பதிவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், புலனாய்வாளர்கள் அவரது டிஜிட்டல் தடங்கள் (digital footprint) மூலம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டறிவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.