September 22, 2023 6:13 am

நொருங்குண்ட கண்ணாடி | சி. அபினுசா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

ஒரு நாளில் ஒரு தடவையேனும் முன்னிற்ப்பேன்
நிலைக் கண்ணாடியுடன் மெளனமொழியில் உரையாடியபடி

சிரித்தால் சிரிக்கும்
முறைத்தால் முறைக்கும்
உள்ளதைக் காட்டும்
உண்மையைக் கூறும்

ஒருமுறை
நொருங்குண்ட என் இதயம்
துணை தேடிச் சென்றது கண்ணாடி முன்
விம்மினேன், அழுதேன், ஓவெனக் கதறினேன்

பதிலுக்கு விம்மியது, அழுதது. ஓவெனக் கதறவில்லை
ஏன் கதறவில்லை??
ஏனோ இரு கரங்கள் நொருக்கியது நிலைக் கண்ணாடியை

சி. அபினுசா.
விடுகை வருடம்,
பேராதனை பல்கலைக்கழகம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்