செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் உணர்வின் விலை | பாலா சயந்தன்

உணர்வின் விலை | பாலா சயந்தன்

0 minutes read

 

நெருப்புத் துண்டுகளை விழுங்கி
மரணம் விட்டெறிந்த தேசத்தில்
இருளின் மறைவிலே
நிர்வாணத்தை ஒழித்து
அதிகாரத்தின்
காலடியில் அம்மணமாய் சிலர். .!!

அவர்கள்

நல்லிணக்கத்தை உதிர்க்கும் போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
அகதியாக்கப்படுகிறேன். .
சொந்தப் பெயரை துறந்து
குருதி படர்ந்த வெள்ளை துணிக்குள்
நிலத்தை விற்றவர்கள்

தம்மபதத்தையும். .!!
சித்தார்ந்தனையும். .!
வெளிப்படையாக சூடிக் கொள்கிறார்கள்
நேற்றும் சிவில் உடையில் வந்தவர்கள்
என்னிடம் விலை பேசினார்கள்

ஆனால்

அவர்கள் நடந்த தெருக்கள்
அவர்கள் சுவாசித்த காற்று
தொக்கி நிற்கும் வேட்கை
என் உணர்வின் விலையை
கூட்டிக் கொண்டே செல்கின்றன..

-பாலா சயந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More