December 3, 2023 1:00 am

கார்த்திகை நாளில் | த. செல்வா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

புரட்சிக் கீதங்களிசைக்கும்
ஆங்கே சிவப்பு
மஞ்சள்க் கொடிகள் பிறக்கும்
புதிதாக தென்னைகள் பூக்கும்
ஈழ நிலம் புனிதர்களைத் தேடும்
இது போலொரு கார்த்திகை நாளில்

கல்லறைகள் கண் திறக்கும்
விரலிடுக்கில் வேட்கை பூக்கும்
சமர்க்கதைகள் வந்து போகும்
இறுதிக்கையசைப்பு கண்ணீராகும்
வெடியோசை பேரிகையாகும்
இது போலொரு கார்த்திகை நாளில்

தீபங்கள் பூக்களாக
பூக்களைத் தேடிக் கைகள் அலையும்
ஆக்களின் உயிர்கள் அடங்கும் அமைதியில்
தாயகக் கனவுடன் கானமிசைக்கும்
இசைத்திடும் பொழுதொன்றில்
மெல்லன நீவி வானுமும் அழும்
இது பொலொரு கார்த்திகை நாளில்.

த. செல்வா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்