இலங்கையில் இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை உண்மையேயாகும். இரசாயன ஆயுதங்களும் கொத்துக் குண்டுகளும் பயன்படுத்தியமை தொடர்பிலான ஆதாரங்கள் சர்வதேசத்திடமும் உள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் மனித உரிமை நிலைவரம் தொடர்பில் ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்னர் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். இம் மாதத்தில் இருந்தே இந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங்கள், கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பிலும் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.