Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்புஇறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்பு

இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்புஇறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன : கூட்டமைப்பு

2 minutes read

இலங்­கையில் இறுதி யுத்­தத்தில் இர­சா­யன ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை உண்­மை­யே­யாகும். இர­சா­யன ஆயு­தங்­களும் கொத்துக் குண்­டு­களும் பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பி­லான ஆதா­ரங்கள் சர்­வ­தே­சத்­தி­டமும் உள்­ளன என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

இலங்­கையில் மனித உரிமை நிலை­வரம் தொடர்பில் ஜெனிவா பேச்­சு­வார்த்­தைக்கு முன்னர் உறுப்பு நாடு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவோம். இம் மாதத்தில் இருந்தே இந்த செயற்­பா­டு­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது இர­சா­யன ஆயு­தங்கள், கொத்­துக்­குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் குறித்தும் ஜெனிவா மனித உரிமை பேர­வையின் கூட்­டத்­தொடர் தொடர்­பிலும் கருத்துக் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையின் இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­னரால் இர­சா­யன குண்­டு­களும் கொத்து குண்­டு­களும் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களின் போது பாதிக்­கப்­பட்­டோரின் வாக்கு மூல பதி­வு­களில் ‘பொஸ்­பரஸ்’ இர­சா­யன குண்­டுகள் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை தொடர்பில் சிலர் குறிப்­பிட்­டுள்­ளனர். அதேபோல் இந்­திய வைத்­தி­யர்­க­ளினால் புல்­மோட்டை பகு­தியில் நடத்­தப்­பட்ட யுத்த பாதிப்பு வைத்­திய நட­வ­டிக்­கை­க­ளிலும் இவ் இர­சா­யன ஆயுத பயன்­பாட்­டினை குறிப்­பிட்­டுள்­ளனர்.
முற்­றிலும் போர் தர்­மத்­திற்கு முர­ணான வகையில் மனித உரிமை மீறல்­களை இவ் அர­சாங்கம் செய்­துள்­ளது என்­பதே உண்­மை­யாகும். இதற்கு சான்­றாக தற்­போது மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் மனித புதை­குழி விவ­காரம் அமைந்­துள்­ளது. ஆகவே அர­சாங்­கத்தின் இச்­செ­யலில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.
மேலும் இலங்­கையில் இடம்­பெற்ற மற்றும் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளையே கோரு­கின்றோம். இன்றும் வடக்கில் காணி அப­க­ரிப்பு மற்றும் பெண்கள் துஷ்­பி­ர­யோகம் என்­பன அதி­க­ரித்துக் கொண்டே செல்­கி­றது.
இரா­ணுவ அட்­டூ­ழி­யங்கள் அடக்கு முறைகள் தொடர்பில் சர்­வ­தேச ஊட­க­மான அல் ஜெசீரா தொலைக்­காட்­சியில் இலங்­கையின் தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்பில் ஆதா­ர­பூர்வ காணொளி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இதேபோல் இலங்­கையின் உண்மை நிலைமை தொடர்பில் சர்­வ­தேச நாடுகள் அனைத்தின் கவ­னத்­திற்கும் கொண்டு வரப்­பட வேண்டும். ஜெனிவா மனித உரிமைப் பேர­வை­யிலும் எமது நிலை­மைகள் தொடர்பில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான சகல வித­மான முயற்­சி­க­ளையும் எடுப்போம். தமி­ழர்­களை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஒரே­யொரு கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமி­ழர்­க­ளுக்கு உண்­மை­யா­கவே செயற்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மை­யினை சர்­வ­தேசம் வரையில் கொண்டு செல்ல தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற் கொள்ளும்.
தமி­ழர்­க­ளுக்­கான நிரந்­தரத் அர­சியல் தீர்­வொன்று கிடைக்க வேண்­டு­மென்­பதே எம் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்­பாகும். அதற்­கான சிறந்­த­தொரு வாய்ப்பு இம்­முறை எமக்குக் கிடைத்­துள்­ளது. எனவே இவ் சந்­தர்ப்­பத்­தினை சரி­யான முறையில் பயன்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம்.
அதேபோல் ஜெனிவா மனித உரி­மைகள் மாநாட்­டுக்கு முன்னர் அதன் உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை கூட்டமைப்பு மேற்கொள்ளும். எனவே இம் மாதத்தில் இருந்தே உறுப்பு நாடுகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு எமது உண்மை தன்மையினையும் தமிழ் மக்களின் உண்மை நிலைமையினையும் இவ் உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More