யாழ் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா நேற்றும் இன்றும் ( 10ம் , 11ம் திகதிகளில்) கைலாசபதி அரங்கில் நடைபெற்று வருகின்றது. சுமார் 1300 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தற்போது பட்டமளிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் உள்ள இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று இவ்வருடம் இடம்பெறுகின்ற பட்டமளிப்பு நிகழ்வில் தமது கற்கை நெறிகளை பூர்த்தி செய்து பட்டமேற்கும் தமது மாணவர்களை கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய சமூகம் வாழ்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் பட்டமேற்கும் இராமநாதபுரம் மகா வித்தியாலய மாணவர்களான;
Ajeswaran Jenan (BB.A)
Vethanayagam Senthooran (BBA)
Sarvaloganathan Kajendran (B.COM)
Sivapathasuntharam Thusitha (B.COM)
Kanthasamy Arthy (B.A Hons)
Mahendran Kantharooby (B.A Hons)
Selvaraja Tharshika (B.A)
Muthuthambi Niththija (B.A)
Iruthayathasan Mary Deklla (B.FA)
Gobalakirushnan.Kalpana (B.FA)
ஆகியோரை எமது பாடசாலைச் சமூகம் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துவதோடு இவர்களது துறைகளில் மென்மேலும் வளர்வதோடு, இவர்களது பணி எமது நாட்டில் தொடர இறை ஆசி வேண்டி நிற்கின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களை வணக்கம்LONDON இணையமும் பாராட்டி வாழ்த்துகின்றது.