இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
காரைக்கால் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 52 மீனவர்களும் இன்று மாலை அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்த 52 இலங்கை மீனவர்களும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக, இரு நாடுகளிலும் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, அந்தந்த நாட்டு கடலோரப் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.