மத்திய ஆபிரிக்கக் குடியரசின் இடைக்கால தலைவராக பான்குயி நகர மேயர் கத்தரீன் சம்பா பன்ஸா (59 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில் மேற்படி பதவிக்கு பெண் ஒருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
இடைக்கால பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் பன்ஸா தனது போட்டி வேட்பாளரான டிஸயர் கொலிங்பாவை தோற்கடித்து வெற்றியை தனதாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் மத்திய ஆபிரிக்க குடியரசில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையிலான வன்முறைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது.
பான்குயிலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் இரு முஸ்லிம் ஆண்கள் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டனர்.
தனது வெற்றியையடுத்து பன்ஸா உரையாற்றுகையில், கிறிஸ்தவ போராளிகளும் முன்னாள் செலெகா கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் போராளிகளும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.
கிறிஸ்தவரான பன்ஸா வெற்றிகரமான வர்த்தக பிரமுகராகவும் திகழ்ந்து வருகின்றார்.
மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு படைகளை அனுப்புவதற்கு ஜரோப்பிய ஒன்றிய வெளி நாட்டு அமைச்சர்கள் இணக்கம் கண்டுள்ள நிலையிலேயே அவரது தெரிவு இடம் பெற்றுள்ளது