நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை அனுமதிக்க முடியாது. எனவே இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கையில் இறங்குவோம். கைது செய்வது மாத்திரமன்றி, துப்பாக்கிச் சூடும் நடத்துவோம்.
அவசரகாலச்சட்ட விதிகளின்படி குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
