Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்தது; குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம்!

குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்தது; குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம்!

3 minutes read

கடின பாறைகளால் குழிதோண்டும் பணியின் வேகம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 40 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீற்றர் தொலைவில் 1 மீற்றர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்பட்டு வருகிறது.

ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.

இதுவரை 20 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. 100 அடிவரை முழுமையாகத் தோண்டுவதற்கு இன்னும் இரண்டு, மூன்று மணி நேரம் ஆகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

UPDATE: குழிக்குள் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தாமதம் – குறுக்கிடும் பாறைகளினால் சிக்கல்!

100 அடி குழி தோண்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ப 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம் என கூறப்படுகின்றது.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது.

ரிக் இயந்திரம் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி குழி தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தோண்டும் இடத்தில் பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணி தாமதமாகியுள்ளது.

எனவே 100 அடி குழி தோண்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ப 2 முதல் 3 மணி நேரம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குழிக்குள் இறங்கி குழந்தை சுர்ஜித்தை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்க நடவடிக்கை!

ரிக் இயந்திரம் கொண்டு தோண்டப்படும் குழிக்குள் 3 தீயணைப்பு வீரர்கள் இறங்கி, குழந்தை சுர்ஜித்தை மீட்கவுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீற்றர் தொலைவில் 1 மீற்றர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும். குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது.

இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. அது முடிவடைந்த நிலையில் குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. இந்த பணி ஒன்றரை மணி நேரத்தில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

பின்னர் கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கவுள்ளனர்.

ஒக்சிஜன் குழாய்களுடன் இறங்கும் இவர்கள், பக்கவாட்டில் குழி தோண்டி, குழந்தை சுர்ஜித்தை மீட்பார்கள். அதற்கானத் தகுந்த ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More