Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்து! வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்து! வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

1 minutes read

இலங்கையின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளது. அத்துடன் இந்த நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதன் வேகம் மேலும் அதிகரிக்கும்.

பொது மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகும். எலிக்காய்ச்சல் பாக்டீரியா மூலம் பரவும் நோயாகும். எலி, பெருச்சாலி, எறுமை மாடு போன்றவற்றினால் இந்த பாக்டீரியா பரவுகின்றது.

விலங்குகளின் சிறுநீரகங்களில் வாழும் பாக்டீரியாக்கள் சிறுநீருடன் சுற்றுச்சூழலுக்கு வெளியிடப்படுகின்றன. நெல் வயல்கள் போன்ற நீர் அதிகம் கொண்ட பகுதிகளில் பாக்டீரியாக்கள் ஏராளமாக வாழ்கின்றன. நீரில் உள்ள பாக்டீரியாக்கள் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கண்கள் மற்றும் வாய் போன்றவைகளினால் உடலில் நுழைகின்றன.

இந்த காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக திடீர் காய்ச்சல், தொண்டை புண், தசை வலி மற்றும் முதுகுவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். இதற்கு மேலதிகமாக கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தில் குறைவு போன்ற அறிகுறிகளே காணப்படுகின்றது.

இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். ஆரம்பத்திலேயே சென்றால் இலகுவாக காப்பாற்றி விடலாம்” என வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல், டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More