திடீர் காட்டுத் தீ தென்கொரியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது எனவே தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ தலைநகர் சியோலாவிற்கு தென்கிழக்கீழிருந்து 168km அமையப்பெற்ற கங்கனங் (gangneung )பகுதியில் இன்று காலை பரவியுள்ளது.
இதே நேரம் அந்த பகுதியில் பலத்த காற்றும் வீசுகின்ற காரணத்தால் தீ அதிவேகமாக பரவி வருவதுடன் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ,6 ஹெலிகப்டர்கள் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளது. காட்டு தீயிணை அறிந்த அரசு உடனடியாக 20க்கும் மேலானவரை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.