Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் புலம்பெயர்வோர் மருத்துவ கட்டணத்தை அதிகரித்துள்ள இங்கிலாந்து!

புலம்பெயர்வோர் மருத்துவ கட்டணத்தை அதிகரித்துள்ள இங்கிலாந்து!

0 minutes read

புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிக்க உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின்கீழ், இங்கிலாந்திற்குள் புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம் அதிகரிக்க உள்ளது.

அந்த சட்டத்தின்படி, இங்கிலாந்திற்கு புலம்பெயர்வோர், மருத்துவ கட்டணமாக ஆண்டொன்றிற்கு 1,035 பவுண்டுகள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் தற்போது 624 பவுண்டுகளாக உள்ள நிலையில், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

அதேபோல், 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள் தற்போது 470 பவுண்டுகள் கட்டணம் செலுத்தும் நிலையில், 6 ஆம் திகதி முதல் அது ஆண்டுக்கு 776 பவுண்டுகளாக உயர உள்ளது.

இது, தற்போதுள்ள கட்டணத்தைவிட 66 சதவிகித அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகிறது. இங்கிலாந்திற்கு புலம்பெயர விண்ணப்பம் செலுத்தும்போதே இந்தக் கட்டணத்தையும் புலம்பெயர்வோர் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More