Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு மலிங்கவின் சாதனையை முறியடித்தார் ஷாகிப் அல் ஹசன்

மலிங்கவின் சாதனையை முறியடித்தார் ஷாகிப் அல் ஹசன்

1 minutes read

ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் புரிந்துள்ளார்.

முன்னாள் பங்களாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஞாயிற்றுக்கிழமை ஸ்காட்லாந்துக்கு எதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆண்களுக்கான சர்வதேச டி-20 கிரிக்கெட் போடியில் மொத்தமாக 108 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கவின் சாதனை முறியடித்து அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஷாகிப் தற்போது 89 போட்டிகளில் இருந்து 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இதற்கு முன்னர் மலிங்க 84 டி-20 போட்டியில் 107 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை நியூசிலாந்தின் டிம் சவுத்தி (99), பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி (98) மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (95) ஆகியோரு முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More