Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு கொரியாவுக்கு சென்ற இலங்கை மகளிர் றக்பி அணித்தலைவியை காணவில்லை

கொரியாவுக்கு சென்ற இலங்கை மகளிர் றக்பி அணித்தலைவியை காணவில்லை

1 minutes read

சர்வதேச றக்பி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக தென் கொரியாவுக்குச் சென்றிருந்த இலங்கை மகளிர் றக்பி அணியின் தலைவி துலானி பல்லேன்கொந்தகே காணாமல் போயுள்ளார்.

7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான ஏசியன் றக்பி செவன்ஸ் தொடரின் 2 ஆவது கட்டப் போட்டியில் பங்குபற்றுவற்காக இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தென் கொரியாவுக்குச் சென்றிருந்தன.

இப்போட்டிகளின் பின்னர் இலங்கை அணி தென்கொரியாவின் இன்சின் நகரிலிருந்து இன்று முற்பகல் இலங்கைக்குப் புறப்படவிருந்தது.

இந்நிலையில் இலங்கை மகளிர் அணியின் தலைவி துலானி பல்லேகொந்தகே காணாமல் போயுள்ளார். 

இது தொடர்பில் கொரிய றக்பி சங்கத்தின் ஊடாக கொரிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More