இண்டியன் ப்றீமியர் லீக் (ஐபிஎல்) ஏலத்தில், இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இது புதிய சாதனையாகும்.
கேரளாவின் கொச்சி நகரில் இன்று நடைபெற்ற ஐபிஎல்)ஏலத்தில் 18.50 கோடி இந்திய ரூபாவுக்கு (சுமார் 82 கோடி இலங்கை ரூபா) சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் இது புதிய சாதனையாகும்.
2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் கிறிஸ் மொரிஸ் 16,25 கோடி இந்திய ரூபாவுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் வாங்கப்பட்டமையே முந்தைய சாதனையாக இருநதது,
அதேவேளை, இம்முறை கெமரூன் கிறீனை மும்பை இந்தியன்ஸ் 17.50 கோடி ரூபாவுக்கு வாங்கியது.
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்கியது.
கடந்த மாதம் நிறைவடைந்த இருபது20 உலகக் கிண்ணத் தொடரில்? சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக சாம் கரன் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.