Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9

2 minutes read

சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின் அவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை பற்றியும் செங்கல் சுடு முறை பற்றியும் அதிககாலம் ஒருவரும் அறியமுடியவில்லை. சுமேரியரின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு அதுபோல் எகிப்தியரும் கட்டடங்களைக் கட்ட முயன்றனர்.

எகிப்தில் பாரிய பெருங்கற்களே இருந்ததனால் எகிப்தியர் அப்பெரிய கற்களை செங்கல் போன்ற அமைப்பிலும் அளவிலும் உடைத்துச் சிறிதாக்கியே முதல் பிரமிட்டைக் கட்டினார்கள். பின்னர் அது சிரமமாக இருந்ததால் பின்னர் கட்டப்பட்டவை பெருங் கற்களால் கட்டப்பட்டன.

A2தற்பொழுது கூட உலகின் 80 வீதமான வீடுகள் செங்கற்களால் கட்டப்படுகின்றன. சுமேரியர் பானைகள் சட்டிகள் தட்டுக்கள் போன்றவற்றையும் செங்கற்களையும் சுட்டெடுக்கும் முறையும் மற்றைய இனங்கள் அறியாததால் அவர்கள் வனைந்த பானைகள் கைகளால் வனைந்ததாகவும் தீயில் சுடப்படாது வெயிலில் காயவைத்ததாகவே இருந்ததது. அதனால் இலகுவில் உடைந்தும் போயின. சுமேரியரின் பானைகள் கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளியிலும் 1500 ஆண்டளவில் இந்தியாவிலும் 1000 ஆண்டுகள் பழையதாக ஈழத்தின் பொம்பரிப்பிலும் காணப்பட்டன.

A3

ஒரு இனம் தாம் இடம்பெயர்ந்து செல்லும்போது அனைத்துப் பொருட்களையும் காவிக்கொண்டு செல்வதில்லை. மாறாக தாம் போன இடங்களில் அதன் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்துவர். அதுபோலவே தாம் புலம்பெயர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களாக சுமேரியர் வடிவ மட்பாண்டங்கள்  தமிழர்களின் பானைகள் சட்டிகளாக  இருக்கின்றன. அவர்கள் அம்மியும் குழவியையும் அரைப்பதற்குப் பயன்படுத்தினர். சுமேரியரின் கிரைண்டிங் மிசின் என அம்மி சொல்லப்படுகிறது. அம்மி கூட சுமேரியரிடமிருந்து தொடர்ச்சியாக எம்மிடம் வந்திருப்பதிலிருந்து  சுமேரியரே தமிழர் என அறிய முடிகிறது.

இவற்றுடன் மட்டும் சுமேரியர் நின்றுவிடவில்லை. நோய்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வைத்தியம் செய்யும் முறை கூட அவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அகழ்வாய்வில்  கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் சிலவற்றில் மூன்று துளைகள் காணப்படுகின்றன. சுமேரிய மருத்துவர்களால் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாகவே அத துளைகள் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

 

தொடரும் …

 

 

Nivetha  நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து

 

 

இத்தொடரின் முன்னைய பகுதிகள்

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/

http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/

http://www.vanakkamlondon.com/sumerian-history6/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/

http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/

 

 

(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்யார் இந்த சுமேரியர்இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானதுஇவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்னஅப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…)

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More