ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விடயம் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அரசு சார்பில் இறுதிசடங்கு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது ஆகும்
ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய அபே, கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
அவருக்கு வருகிற 27ம் தேதி அரசு சார்பில் இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற காவல்துறை அதிகாரி காயமடைந்தார்