இங்கிலாந்தில் வைத்திய நிபுணர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சம்பள உயர்வு கோரி, அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி – லண்டனில் ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளர்கள்
இதனால் திட்டமிடப்பட்ட மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட பல வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.