இங்கிலாந்தின் வேல்சில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு சுமார் 900 தாதியர்களை வெளிநாடுகளில் இருந்து நியமிக்க அங்குள்ள சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த நிதியாண்டில் மாத்திரம் சுமார் 350 வெளிநாட்டு தாதியர்களை தேர்வு செய்யவுள்ளதாக வேல்ஸ் தேசிய சுகாதாரப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தாதியர்கள் தேர்வு உடனடி மற்றும் அனுபவ அடிப்படையில் இருக்கும் என ஸ்வான்சீ பே பல்கலைக்கழக சுகாதாரத் துறை இயக்குனர் கரேத் ஹவல்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும் தாதியர்களை பணியமர்த்த வேல்ஸ் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோரை கேரளாவில் இருந்து தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.