Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பாரிஸில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை

பாரிஸில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை

0 minutes read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வீதிகளில் ஆங்காங்கே மின்சார ஸ்கூட்டர்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து, பயன்படுத்தலாம்.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால், அங்கு வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனவே, இந்த மின்சார ஸ்கூட்டர்களை தடைசெய்ய வேண்டும் எனப் பலர் குரல் எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து, பாரிஸ் நகர மேயர் அனீ ஹிடால்கோ வாக்கெடுப்பு நடத்தினார். இதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அதில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பொது மின்சார ஸ்கூட்டர்களை தடை செய்ய வேண்டும் என வாக்களித்தனர்.

இதனால் அந்த நகரில் பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தனிநபர்கள் தங்களது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More