ரசியாவுக்கு வலுவான எச்சரிக்கையை விடுத்துள்ளது ஜி 7 நாடுகள்; அணு , இரசாயனஅல்லது உயிரியல்ஆயுதங்கள் பயன்படுத்தினால் “கடுமையான எதிர்ப்பை ” சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரையினுக்கு எதிரான ரசியாவின் போருக்கு இப்போது சீனாவின் ஆதரவும் அதிகரித்துள்ள நிலையில் விழிப்படைந்த ஜி 7 அமைப்பு உடனடியாக உக்ரைனை விட்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளியில் வர வேண்டும் என மேலும் கூறியுள்ளது.
ஜி7 நாடுகள், சீனாவை சுட்டிக்காட்டி தைவான் விவகாரத்தில் பொறுப்புடன் நடந்துக் கொள்ளவது நல்லது என்றது.
ஜப்பானின் கரூஜவாவில் 2 நாள் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இவை முக்கியமாக கூறப்பட்டுள்ளது.மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும். வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தவிர்க்க வேண்டுமென இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.